இயக்கம்: ரமேஷ் பாரதி, ஒளியமைப்பு: பிரேம் குமார்.
இப்பொதுச்சமூகம் கல்வியறிவு குறித்த புரிதலை எவ்வாறு கொண்டுள்ளது. அது எதிர்பார்க்கும் அளவீட்டில் பயணிக்க இயலாத ஒருதரப்பு மாணவர்கள் மற்றும் இளையோரின் சிக்கல்களை பேச முயன்றுள்ளது இந்நாடகம்.
வாழ்வில் வெற்றிபெற கல்வி மட்டுமே பிரதானமல்ல. கலையும் அவ்வெற்றிக்கான திறவுகோல், கலையால் என்ன வருவாய் கிடைக்கும்? கல்விதான் பிரதானம் என வெவ்வேறு நிலைப்பாடு கொண்ட மாந்தர்கள்.
இவர்களுக்கிடையே குழம்பித்தவிக்கும் இளஞ்சமூகத்தின் மன அழுத்தத்தை பிரதிபலிக்க எத்தனித்துள்ளார் இயக்குனர் ரமேஷ் பாரதி.
மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவனாக ஆர்யனின் நடிப்பு சிறப்பு. சக்திநாதன் மற்றும் ரமேஷ் பாரதியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்கள் நன்று.
மற்றபடி.. அழுத்தமான முத்திரையை பதிக்க தவறுகிறது இந்நாடகம்.
சில ஆழமான கருத்துகளையேனும் பூடகமாக உணர்த்தி நம் சிந்தனைத்திறனுக்கு வேலை தருவது கூத்துப்பட்டறை நாடகங்களின் தனித்துவம்.
ஆனால் இங்கே கதையமைப்பு, வசனம் எல்லாம்..பிரச்சார பாணியில்.. தட்டையாக நகர்ந்து முடிகின்றன.
கதைக்களம் மற்றும் கதாபாத்திர சூழலை தாண்டிய சில வசனங்களும் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இறுதியாக ஒலிக்கும் தேசபக்தி பாடலுக்கும், இக்கதைக்களத்திற்கும் என்ன சம்மந்தம் என புரியவில்லை.
கூத்துப்பட்டறை நாடகங்களில்.. சமூகம் சார்ந்த (குறைந்தபட்ச) தீவிரத்தன்மை கொண்ட இயக்கமும், நடிப்பும் இங்கே போதுமானதாக இல்லாமல் போகிறது.
தனது அடுத்த படைப்பில் இயக்குனர் ரமேஷ்பாரதி.. இப்படியான குறைகளை கலைந்து எம்மாதிரியான ஆக்கத்தை தருவார் என பார்ப்போம்.
விளையாட்டு - போதாத பயிற்சி.
----------------
விமர்சனம்:
சிவகுமார்.
No comments:
Post a Comment